இந்து மக்கள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாராபுரம் காவல்நிலையத்தில் திமுகவினர் புகார்

தாராபுரத்தையும் வெள்ளக்காடாக மாற்றத் துடிக்கும் திமுக நகர மன்ற நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என போஸ்டர் அடித்து தாராபுரம் நகர் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் ஒட்டி உள்ளனர்.


திருப்பூர்: பொய்யான தகவல்களை பரப்பி வரும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் இடத்தில் திமுகவினர் புகார் அளித்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக நகர் மன்ற தலைவர் ரூ.2 கோடி ஊழல். அமராவதி பாசன வயல் நிலங்களை பணத்துக்காக மனை பிரிவுகளாக வகைப்பாடு மாற்றி கூறு போட துடிக்கும் திமுக நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களை கண்டிக்கிறோம்.

தமிழ்நாட்டை வெள்ளக்காடாக ஆக்கியது பற்றாதா. தாராபுரத்தையும் வெள்ளக்காடாக மாற்றத் துடிக்கும் திமுக நகர மன்ற நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் 29ஆம் தேதி நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர், அக்கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என போஸ்டர் அடித்து தாராபுரம் நகர் முழுவதும் ஒட்டி உள்ளனர்.



இதனை பார்த்த திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் கொதிப்படைந்து, பொய்யான தகவல்களை பரப்பி வரும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் இடத்தில் புகார் மனு கொடுத்தனர்.

இதில் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களை தவறாக சித்தரித்து பொதுமக்கள் மத்தியில் அவர்களுக்கு இருந்த நற்பெயர்களை கெடுக்கும் பட்சத்திலும் மேலும் திமுக ஆட்சியை குறை கூறும் பட்சத்திலும் வேண்டுமென்றே இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் செயல்படுவதாகவும், இதனால் நகர் மன்ற உறுப்பினர் மற்றும் நகர மன்ற தலைவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதால் ரூ 5 கோடியை இழப்பீட்டுத் தொகையாக திருப்பூர் தெற்கு மாவட்ட தாராபுரம் நகர இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தர வேண்டும் எனவும், உரிய சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுத்து அவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

காவல் நிலையத்தில் 25 கவுன்சிலர்கள் புகார் மனு கொடுத்தனர். இதனால் திமுகவினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்து மக்கள் கட்சி அலுவலகம் மற்றும் கடைவீதி, அண்ணா சிலை போன்ற முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...