இந்து மக்கள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாராபுரம் காவல்நிலையத்தில் திமுகவினர் புகார்

தாராபுரத்தையும் வெள்ளக்காடாக மாற்றத் துடிக்கும் திமுக நகர மன்ற நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என போஸ்டர் அடித்து தாராபுரம் நகர் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் ஒட்டி உள்ளனர்.


திருப்பூர்: பொய்யான தகவல்களை பரப்பி வரும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் இடத்தில் திமுகவினர் புகார் அளித்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக நகர் மன்ற தலைவர் ரூ.2 கோடி ஊழல். அமராவதி பாசன வயல் நிலங்களை பணத்துக்காக மனை பிரிவுகளாக வகைப்பாடு மாற்றி கூறு போட துடிக்கும் திமுக நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களை கண்டிக்கிறோம்.

தமிழ்நாட்டை வெள்ளக்காடாக ஆக்கியது பற்றாதா. தாராபுரத்தையும் வெள்ளக்காடாக மாற்றத் துடிக்கும் திமுக நகர மன்ற நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் 29ஆம் தேதி நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர், அக்கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என போஸ்டர் அடித்து தாராபுரம் நகர் முழுவதும் ஒட்டி உள்ளனர்.



இதனை பார்த்த திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் கொதிப்படைந்து, பொய்யான தகவல்களை பரப்பி வரும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் இடத்தில் புகார் மனு கொடுத்தனர்.

இதில் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களை தவறாக சித்தரித்து பொதுமக்கள் மத்தியில் அவர்களுக்கு இருந்த நற்பெயர்களை கெடுக்கும் பட்சத்திலும் மேலும் திமுக ஆட்சியை குறை கூறும் பட்சத்திலும் வேண்டுமென்றே இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் செயல்படுவதாகவும், இதனால் நகர் மன்ற உறுப்பினர் மற்றும் நகர மன்ற தலைவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதால் ரூ 5 கோடியை இழப்பீட்டுத் தொகையாக திருப்பூர் தெற்கு மாவட்ட தாராபுரம் நகர இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தர வேண்டும் எனவும், உரிய சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுத்து அவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

காவல் நிலையத்தில் 25 கவுன்சிலர்கள் புகார் மனு கொடுத்தனர். இதனால் திமுகவினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்து மக்கள் கட்சி அலுவலகம் மற்றும் கடைவீதி, அண்ணா சிலை போன்ற முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...