முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோவையில் சிறு, குறு தொழில் அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

வாழ்வாதாரத்தை பறிக்கும் 430 சதவீதம் நிலை கட்டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும், 2 ஆண்டுக்கு கட்டண உயர்வு இருக்க கூடாது, 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பிற்கு 3A 1 Tariff மாற்ற வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும், சொந்த தொழில் கூடங்கள் மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சிறு,குறு தொழில் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு, கோவை தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்புகள் என 30-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் கூட்டமைப்புகள் ஒன்று சேர்ந்து தொழில்துறை மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 8-வது கட்ட போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே சிறுகுறு தொழில் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்த மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.



தமிழக அரசை கண்டித்து பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தொழிலாளர்கள் கைகோர்த்து நின்றனர்.



இந்தப் போராட்டத்தில் 750 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 5 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கலி போராட்டமானது நடைபெற்றது. திமுக ஆட்சி வந்த பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியதால் சிறுகுறு தொழில் நிறுவனங்களை முடக்கி உள்ளது. 2003-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நிலை கட்டணம் என்பது 35 ரூபாய் இருந்து வந்தது. 2022-ம் ஆண்டு முதல் நிலை கட்டணத்தை 35 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை உயர்த்தி 430% கட்டண மடங்கை அதிகரித்து உள்ளனர். முக்கிய கோரிக்கையான வாழ்வாதாரத்தை பறிக்கும் 430% நிலை கட்டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும், 2 ஆண்டுக்கு கட்டண உயர்வு இருக்க கூடாது. 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பிற்கு 3A 1 Tariff மாற்ற வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்,சொந்த தொழில் கூடங்கள் மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...