முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோவையில் சிறு, குறு தொழில் அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

வாழ்வாதாரத்தை பறிக்கும் 430 சதவீதம் நிலை கட்டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும், 2 ஆண்டுக்கு கட்டண உயர்வு இருக்க கூடாது, 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பிற்கு 3A 1 Tariff மாற்ற வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும், சொந்த தொழில் கூடங்கள் மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சிறு,குறு தொழில் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு, கோவை தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்புகள் என 30-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் கூட்டமைப்புகள் ஒன்று சேர்ந்து தொழில்துறை மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 8-வது கட்ட போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே சிறுகுறு தொழில் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்த மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.



தமிழக அரசை கண்டித்து பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தொழிலாளர்கள் கைகோர்த்து நின்றனர்.



இந்தப் போராட்டத்தில் 750 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 5 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கலி போராட்டமானது நடைபெற்றது. திமுக ஆட்சி வந்த பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியதால் சிறுகுறு தொழில் நிறுவனங்களை முடக்கி உள்ளது. 2003-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நிலை கட்டணம் என்பது 35 ரூபாய் இருந்து வந்தது. 2022-ம் ஆண்டு முதல் நிலை கட்டணத்தை 35 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை உயர்த்தி 430% கட்டண மடங்கை அதிகரித்து உள்ளனர். முக்கிய கோரிக்கையான வாழ்வாதாரத்தை பறிக்கும் 430% நிலை கட்டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும், 2 ஆண்டுக்கு கட்டண உயர்வு இருக்க கூடாது. 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பிற்கு 3A 1 Tariff மாற்ற வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்,சொந்த தொழில் கூடங்கள் மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...