முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோவையில் சிறு, குறு தொழில் அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

வாழ்வாதாரத்தை பறிக்கும் 430 சதவீதம் நிலை கட்டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும், 2 ஆண்டுக்கு கட்டண உயர்வு இருக்க கூடாது, 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பிற்கு 3A 1 Tariff மாற்ற வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும், சொந்த தொழில் கூடங்கள் மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சிறு,குறு தொழில் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு, கோவை தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்புகள் என 30-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் கூட்டமைப்புகள் ஒன்று சேர்ந்து தொழில்துறை மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 8-வது கட்ட போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே சிறுகுறு தொழில் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்த மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.



தமிழக அரசை கண்டித்து பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தொழிலாளர்கள் கைகோர்த்து நின்றனர்.



இந்தப் போராட்டத்தில் 750 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 5 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கலி போராட்டமானது நடைபெற்றது. திமுக ஆட்சி வந்த பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியதால் சிறுகுறு தொழில் நிறுவனங்களை முடக்கி உள்ளது. 2003-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நிலை கட்டணம் என்பது 35 ரூபாய் இருந்து வந்தது. 2022-ம் ஆண்டு முதல் நிலை கட்டணத்தை 35 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை உயர்த்தி 430% கட்டண மடங்கை அதிகரித்து உள்ளனர். முக்கிய கோரிக்கையான வாழ்வாதாரத்தை பறிக்கும் 430% நிலை கட்டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும், 2 ஆண்டுக்கு கட்டண உயர்வு இருக்க கூடாது. 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பிற்கு 3A 1 Tariff மாற்ற வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்,சொந்த தொழில் கூடங்கள் மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...