முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோவையில் சிறு, குறு தொழில் அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

வாழ்வாதாரத்தை பறிக்கும் 430 சதவீதம் நிலை கட்டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும், 2 ஆண்டுக்கு கட்டண உயர்வு இருக்க கூடாது, 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பிற்கு 3A 1 Tariff மாற்ற வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும், சொந்த தொழில் கூடங்கள் மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சிறு,குறு தொழில் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு, கோவை தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்புகள் என 30-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் கூட்டமைப்புகள் ஒன்று சேர்ந்து தொழில்துறை மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 8-வது கட்ட போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே சிறுகுறு தொழில் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்த மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.



தமிழக அரசை கண்டித்து பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தொழிலாளர்கள் கைகோர்த்து நின்றனர்.



இந்தப் போராட்டத்தில் 750 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 5 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கலி போராட்டமானது நடைபெற்றது. திமுக ஆட்சி வந்த பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியதால் சிறுகுறு தொழில் நிறுவனங்களை முடக்கி உள்ளது. 2003-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நிலை கட்டணம் என்பது 35 ரூபாய் இருந்து வந்தது. 2022-ம் ஆண்டு முதல் நிலை கட்டணத்தை 35 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை உயர்த்தி 430% கட்டண மடங்கை அதிகரித்து உள்ளனர். முக்கிய கோரிக்கையான வாழ்வாதாரத்தை பறிக்கும் 430% நிலை கட்டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும், 2 ஆண்டுக்கு கட்டண உயர்வு இருக்க கூடாது. 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பிற்கு 3A 1 Tariff மாற்ற வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்,சொந்த தொழில் கூடங்கள் மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...