உடுமலை அருகே நடந்த நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விழிப்புணர்வு சிகிச்சை முகாம்

நாட்டின நாய்கள் பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரம் மற்றும் காணொளி படம் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. 70க்கும் மேற்ப்பட்ட நாட்டின நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசிகள் போடப்பட்டது.


திருப்பூர் ;திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நாட்டின நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.



தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் "நாட்டின நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்" பெதப்பம்பட்டி கால்நடை சிகிச்சை வளாகத்தில் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் பா.குமாரவேல் இவ்விழாவை தலைமையேற்று நடத்தி நாட்டின நாய்கள் பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரம் மற்றும் காணொளி படம் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டார். அவர் தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு நாட்டின நாய்களை பாதுகாப்பதன் முக்கியதுவத்தை எடுத்துரைத்தார்.



திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் மண்டல நாட்டின நாய்கள் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.ரவிமுருகன் சிறப்புரை யாற்றினார். அவர் தம் உரையில் நாட்டின நாய்கள் நம் கலாச்சாரத்தோடு இணைந்துள்ளது என்பதை விவரித்தார். அம்மாபட்டி மற்றும் சாளையூர் கிராமத்தில் உள்ள நாட்டின நாய் வளர்ப்பு ஆர்வலர்கள் முறையே குமார் மற்றும் சாந்தகுமார் வாழ்துரை வழங்கி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை மருத்துவ சிகிச்சையியல் துறையின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். உதவிப் பேராசிரியர் மருத்துவர் இன்பராஜ் நன்றியுரையாற்றினார். இவ்விழாவில் உடுமலைப்பேட்டை மற்றும்அதன் சுற்று வட்டாரங்களில் இருந்து 70க்கும் மேற்ப்பட்ட நாட்டின நாய்களுக்கு இலவசவெறிநோய் தடுப்பூசிகள் போடப்பட்டது. இவ்விழாவில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...