உப்பிலிபாளையத்தில் இன்ஜினியரிடம் பணம் மோசடி- போலீசார் விசாரணை

பணம் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்ற ஆசை வார்த்தையை நம்பி மொபைனல் போனில் பேசிய நபரின் வங்கி கணக்கிற்கு, 5.88 லட்சம் ரூபாயை பல தவணைகளாக கீர்த்தி குமார் என்பவர் அனுப்பி வைத்து ஏமார்ந்துள்ளார். இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார்.


கோவை: கோவை, உப்பிலிபாளையம் காந்தி புதுாரை சேர்ந்தவர் கீர்த்திகுமார், 35; சாப்ட்வேர் இன்ஜினியர்.சில மாதங்களுக்கு முன், இவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கு மெசேஜ் வந்தது.

அதிலுள்ள மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டபோது பேசிய நபர், 'பகுதி நேர வேலையாக, ஆன்லைனில் விளம்பரம் பார்த்தால், பணம் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம்' என, கூறினார்.

அதை நம்பிய கீர்த்தி குமார், அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, 5.88 லட்சம் ரூபாயை பல தவணைகளாக அனுப்பி வைத்தார். அதன் பின், அந்த நபரை, கீர்த்தி குமாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...