வால்பாறை அருகே வன பகுதிக்குள் மக்னா யானை உயிரிழப்பு - வனத்துறையினர் ஆய்வு

யானை பாறையில் நடக்கும் பொழுது வழுக்கி விழுந்து இறந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும்,யானை இறந்து சில தினங்கள் கடந்து இருக்கும் எனவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதிக்குள் மக்னா யானை உயிரிழப்பு குறித்து வால்பாறை வனத்துறை மற்றும் பொள்ளாச்சி வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.



கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்ட பகுதிகளில் விலைநிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து கோவை பகுதியில் விட்டனர்.

சில தினங்களாக வனப்பகுதியில் இருந்த மக்னா யானை மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து விலைநிலங்களை சேதப்படுத்தியது, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு யானையை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் யானையை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

யானையை டாப்ஸ்லிப் யானைகள் முகாம் பகுதியில் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி வனப்பகுதிக்குள் விட்டனர். யானை சில தினங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சேத்துமடை சர்க்கார்பதி, சரளபதி, ஆனைமலை, கோவை போன்ற பகுதிகளில் சுற்றி குடியிருப்பு பகுதியில் சுற்றியது யானையை மீண்டும் வனத்துறையினர் பிடித்து மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மந்திரி மட்டம் என்ற இடத்தில் யானையை விடுவித்தனர்.

யானை மீண்டும் சில தினங்களில் அதேபோல் ஆனைமலை பகுதியில் உள்ள சேத்துமடை, சர்க்கார்பதி, சராளபதி போன்ற இடங்களில் விலைநிலங்களை சேதப்படுத்தியது. மக்கள் போராட்டம் நடத்தி யானையை மீண்டும் பிடிக்க வலியுறுத்தினர். யானையை மீண்டும் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து வால்பாறை பகுதியில் உள்ள சின்னக்கல்லார் வனப்பகுதியில் விட்டனர். யானை சிறிது காலம் வால்பாறை சுற்றுவட்டாரத்திலே சுற்றி வந்தது.

வால்பாறை அருகே உள்ள சக்தி எஸ்டேட் வனப்பகுதியில் யானை நன்றாக உள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்து வந்த நிலையில், நேற்று வால்பாறை வன சரகத்துக்கும் பொள்ளாச்சி வன சரகத்துக்கும் இடையில் உள்ள வன பகுதியில் யானை இறந்து இருப்பதாக வனப் பகுதிக்குள் ரவுந்த் பணிக்கு சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் ஆனைமலை கல இயக்குனருடன் தெரிவித்தனர்.



இந்நிலையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து பார்த்ததில் யானை பாறையில் நடக்கும் பொழுது வழுக்கி விழுந்து இறந்ததாக தெரிகிறது. யானை இறந்து சில தினங்கள் கடந்து இருக்கும் என்பது தெரியவந்த.



மேலும் இன்று உடல் கூறு ஆய்வுக்கு பின் மக்னா யானை இறந்தது குறித்து தெரியும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...