திருப்பூர் கணபதிபாளையத்தில் தமிழ்நாடு யோகாசன போட்டி - 400-க்கும் மேற்பட்ட யோகாசன மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கணபதிபாளையம் வி.ஏ.டி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன், திருப்பூர் மாவட்ட யோகா விளையாட்டு கழகம் சார்பில் 79_வது தமிழ்நாடு யோகாசன சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.


திருப்பூர்: திருப்பூர் கணபதிபாளையத்தில் தமிழ்நாடு யோகாசன சாட்சி போட்டியில் 400-க்கும் மேற்பட்ட யோகாசன மாணவ மாணவிகள் பங்கேற்று தனுராசனம், சாசங்காசனம், சர்வாங்க ஆசனம், சக்கராசனம், வீர வதராசனம் உள்ளிட்ட ஏராளமான ஆசனங்களை செய்து காண்பித்து தங்களது யோகாசன திறமைகளை வெளிகாட்டினர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.



திருப்பூர் அருகே கணபதிபாளையம் வி. ஏ.டி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன், திருப்பூர் மாவட்ட யோகா விளையாட்டு கழகம் சார்பில் 79_வது தமிழ்நாடு யோகாசன சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.



இந்த யோகாசன போட்டியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வரை படிக்கும் மாணவ மாணவிகள், ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள், அனைத்து வயதினர்கள் உள்ளடக்கிய பொது பிரிவு என மூன்று பிரிவுகளில் யோகாசன போட்டிகள் நடைபெற்றன, இந்த யோகாசன போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தனுராசனம், சாசங்காசனம், சர்வாங்க ஆசனம், சக்கராசனம், வீர வதராசனம் உள்ளிட்ட ஏராளமான ஆசனங்களை செய்து காண்பித்து தங்களது யோகாசன திறமைகளை வெளிகாட்டினர்.

இதில் குழந்தைகளின் பெற்றோர்கள் புதிதாக யோகாசனத்தை கற்க விரும்பும் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.



இந்த யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்த யோகாசன போட்டியானது முழுக்க முழுக்க குழந்தைகளின் திறனை மேம்படுத்த திறனாய்வு போட்டியாக நடைபெற்றன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...