சின்னக்கம்பாளையத்தில் வீட்டிற்கு வெள்ளை அடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேருக்கு கத்திக்குத்து

வீட்டிற்கு வெள்ளையடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மதிவாணன் தான் மறைத்து வைத்திருந்த சகத்தியை எடுத்து சக்திவேல், அவரது அண்ணன் மற்றும் சக்திவேல் மகன் மதன் குமார் ஆகிய மூன்று பேரையும் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூன்று பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே வீட்டிற்கு வெள்ளை அடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேருக்கு கத்திக்குத்து விழுந்ததில் காயம் ஏற்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் கூறியதாவது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது சின்னக்கம்பாளையம். இப்பகுதியில் சக்திவேல் மற்றும் மதிவாணன் ஆகிய இருவரின் வீடும் ஒட்டி உள்ளது. இதில் சக்திவேல் என்பவர் தனது இடத்தில் இடைவெளி விடாமல் வீடு கட்டியுள்ளார்.

இவர் தான் கட்டிய வீட்டிற்கு வெள்ளையடிக்க அருகில் வசிக்கும் மதிவாணன் வீட்டு இடத்துக்குள் சென்ற சக்திவேலை பார்த்து உனது இடம் முழுவதும் வீடு கட்டி விட்டாய் எதற்கு என் வீட்டு வாசலுக்கு வந்தாய் என மதிவாணன் தட்டி கேட்டார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சக்திவேல் சார்பாக அவரது அண்ணன் கருப்புசாமி மற்றும் மகன் மதன்குமாரும், அதே போல மதிவாணன் சார்பாக தம்பி ரமேஷ் பாபு சேர்ந்து தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்திரமடைந்த மதிவாணன் தான் மறைத்து வைத்திருந்த சூரிகத்தியை எடுத்து சக்திவேல், அவரது அண்ணன் மற்றும் சக்திவேல் மகன் மதன் குமார் ஆகிய மூன்று பேர்களை கத்தியால் குத்தினார்.



அதில் பலத்த காயமடைந்து சக்திவேல் (55) அண்ணன் கருப்புசாமி (58) சக்திவேல் மகன் மதன்குமார் (18) ஆகிய மூவரும் பலத்த கத்தி குத்தி காயங்களுடன் அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சம்பவத்தில் மூன்று பேர்களை கத்தியால் குத்திய மதிவாணன் மற்றும் இவரது தம்பி ரமேஷ்பாபு ஆகிய இரண்டு பேர்களும் தலைமறைவாயினர். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அண்ணன், தம்பியை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...