சின்னக்கம்பாளையத்தில் வீட்டிற்கு வெள்ளை அடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேருக்கு கத்திக்குத்து

வீட்டிற்கு வெள்ளையடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மதிவாணன் தான் மறைத்து வைத்திருந்த சகத்தியை எடுத்து சக்திவேல், அவரது அண்ணன் மற்றும் சக்திவேல் மகன் மதன் குமார் ஆகிய மூன்று பேரையும் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூன்று பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே வீட்டிற்கு வெள்ளை அடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேருக்கு கத்திக்குத்து விழுந்ததில் காயம் ஏற்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் கூறியதாவது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது சின்னக்கம்பாளையம். இப்பகுதியில் சக்திவேல் மற்றும் மதிவாணன் ஆகிய இருவரின் வீடும் ஒட்டி உள்ளது. இதில் சக்திவேல் என்பவர் தனது இடத்தில் இடைவெளி விடாமல் வீடு கட்டியுள்ளார்.

இவர் தான் கட்டிய வீட்டிற்கு வெள்ளையடிக்க அருகில் வசிக்கும் மதிவாணன் வீட்டு இடத்துக்குள் சென்ற சக்திவேலை பார்த்து உனது இடம் முழுவதும் வீடு கட்டி விட்டாய் எதற்கு என் வீட்டு வாசலுக்கு வந்தாய் என மதிவாணன் தட்டி கேட்டார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சக்திவேல் சார்பாக அவரது அண்ணன் கருப்புசாமி மற்றும் மகன் மதன்குமாரும், அதே போல மதிவாணன் சார்பாக தம்பி ரமேஷ் பாபு சேர்ந்து தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்திரமடைந்த மதிவாணன் தான் மறைத்து வைத்திருந்த சூரிகத்தியை எடுத்து சக்திவேல், அவரது அண்ணன் மற்றும் சக்திவேல் மகன் மதன் குமார் ஆகிய மூன்று பேர்களை கத்தியால் குத்தினார்.



அதில் பலத்த காயமடைந்து சக்திவேல் (55) அண்ணன் கருப்புசாமி (58) சக்திவேல் மகன் மதன்குமார் (18) ஆகிய மூவரும் பலத்த கத்தி குத்தி காயங்களுடன் அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சம்பவத்தில் மூன்று பேர்களை கத்தியால் குத்திய மதிவாணன் மற்றும் இவரது தம்பி ரமேஷ்பாபு ஆகிய இரண்டு பேர்களும் தலைமறைவாயினர். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அண்ணன், தம்பியை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...