வால்பாறை அருகே தடுப்புச் சுவரில் மோதி டிராக்டர் விபத்து - எஸ்டேட் தொழிலாளி படுகாயம்

டிராக்டர் விபத்தில் மகேஷ்வரன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர். பாலத்தில் இருந்து தண்ணீரில் விழுந்து தலையில் அடிபட்ட நிலையில், 11 பேர்கள் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் உள்ளனர்.


கோவை: வால்பாறை அருகில் நடுமலை ஆற்று பாலத்தி சென்ற எஸ்டேட் டிராக்ட்டர் தடுப்பு சுவரில் மோதியதில் எஸ்டேட் தொழிலாளிகள் காயம் அடைந்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் நேற்று வீட்டு வாசலில் 12 வயது சிறுவன் சேலையால் ஊஞ்சல் கட்டி ஆடும்போது கழுத்தில் சேலை மாட்டி இறந்தது உடலை வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து தங்களது குலவழக்கப்படி நல்லடக்கம் செய்ய வேண்டி உறவினர்களிடம் சிறுவனின் பிரேதம் ஒப்படைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.

மேற்படி பிரேதத்துடன் பின் தொடர்ந்து எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான டிராக்டரை ஆகஸ்டின் என்பவர் 12 நபர்களுடன் ஓட்டி சென்று உள்ளார்.



நடுமலை எஸ்டேட் ஆற்று பாலம் வளைவில் திருப்பிய போது தடுப்புச் சுவரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மோதியதில் மகேஷ்வரன் வயது 43 என்பவர் பாலத்தினுள் தண்ணீரில் விழுந்தது. இதில் தலையில் அடிபட்ட நிலையிலும் 11 பேர்கள் லேசான காயங்களுடனும் வால்பாறை காவல் துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



இதில் மகேஷ்வரன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...