வால்பாறை அருகே தடுப்புச் சுவரில் மோதி டிராக்டர் விபத்து - எஸ்டேட் தொழிலாளி படுகாயம்

டிராக்டர் விபத்தில் மகேஷ்வரன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர். பாலத்தில் இருந்து தண்ணீரில் விழுந்து தலையில் அடிபட்ட நிலையில், 11 பேர்கள் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் உள்ளனர்.


கோவை: வால்பாறை அருகில் நடுமலை ஆற்று பாலத்தி சென்ற எஸ்டேட் டிராக்ட்டர் தடுப்பு சுவரில் மோதியதில் எஸ்டேட் தொழிலாளிகள் காயம் அடைந்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் நேற்று வீட்டு வாசலில் 12 வயது சிறுவன் சேலையால் ஊஞ்சல் கட்டி ஆடும்போது கழுத்தில் சேலை மாட்டி இறந்தது உடலை வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து தங்களது குலவழக்கப்படி நல்லடக்கம் செய்ய வேண்டி உறவினர்களிடம் சிறுவனின் பிரேதம் ஒப்படைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.

மேற்படி பிரேதத்துடன் பின் தொடர்ந்து எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான டிராக்டரை ஆகஸ்டின் என்பவர் 12 நபர்களுடன் ஓட்டி சென்று உள்ளார்.



நடுமலை எஸ்டேட் ஆற்று பாலம் வளைவில் திருப்பிய போது தடுப்புச் சுவரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மோதியதில் மகேஷ்வரன் வயது 43 என்பவர் பாலத்தினுள் தண்ணீரில் விழுந்தது. இதில் தலையில் அடிபட்ட நிலையிலும் 11 பேர்கள் லேசான காயங்களுடனும் வால்பாறை காவல் துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



இதில் மகேஷ்வரன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...