வால்பாறை அருகே தடுப்புச் சுவரில் மோதி டிராக்டர் விபத்து - எஸ்டேட் தொழிலாளி படுகாயம்

டிராக்டர் விபத்தில் மகேஷ்வரன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர். பாலத்தில் இருந்து தண்ணீரில் விழுந்து தலையில் அடிபட்ட நிலையில், 11 பேர்கள் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் உள்ளனர்.


கோவை: வால்பாறை அருகில் நடுமலை ஆற்று பாலத்தி சென்ற எஸ்டேட் டிராக்ட்டர் தடுப்பு சுவரில் மோதியதில் எஸ்டேட் தொழிலாளிகள் காயம் அடைந்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் நேற்று வீட்டு வாசலில் 12 வயது சிறுவன் சேலையால் ஊஞ்சல் கட்டி ஆடும்போது கழுத்தில் சேலை மாட்டி இறந்தது உடலை வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து தங்களது குலவழக்கப்படி நல்லடக்கம் செய்ய வேண்டி உறவினர்களிடம் சிறுவனின் பிரேதம் ஒப்படைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.

மேற்படி பிரேதத்துடன் பின் தொடர்ந்து எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான டிராக்டரை ஆகஸ்டின் என்பவர் 12 நபர்களுடன் ஓட்டி சென்று உள்ளார்.



நடுமலை எஸ்டேட் ஆற்று பாலம் வளைவில் திருப்பிய போது தடுப்புச் சுவரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மோதியதில் மகேஷ்வரன் வயது 43 என்பவர் பாலத்தினுள் தண்ணீரில் விழுந்தது. இதில் தலையில் அடிபட்ட நிலையிலும் 11 பேர்கள் லேசான காயங்களுடனும் வால்பாறை காவல் துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



இதில் மகேஷ்வரன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...