குண்டடம் அருகே கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் - திரளான கால்நடைகள் பங்கேற்பு

பசு, எருமை மாடு, ஆடு, கோழி, நாய் ஆகிய கால்நடைகளுக்கு கூடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி உள்ளிட்ட 1,195 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.


திருப்பூர்: குண்டடம் அடுத்த கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

குண்டடம் அடுத்த கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் சூரியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கோப்பனகவுண்டன் பாளையத்தில் நடைபெற்றது. குண்டடம் வட்டாரம் பேட்டை காளிபாளையம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

முகாமில் பீலிக்காம்பட்டி கால்நடை உதவி மருத்துவர் மோகன்ராஜ் தலைமையில் மருத்துவர் கொண்ட குழுவினர் பசு, எருமை மாடு, ஆடு, கோழி, நாய் ஆகிய கால்நடைகளுக்கு கூடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி உள்ளிட்ட 1,195 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும் மழை மற்றும் பனிக்காலத்தில் கால்நடைகளை எவ்வாறு பாதுகாப்பது குறித்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் முதலிபாளையம் கால்நடை உதவி மருத்துவர் அருண்நிதி, பொன்னாங்காளிவலசு கால்நடை ஆய்வாளர் காந்திமதி, குண்டடம் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுமதி, விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சிறந்த கால்நடை மேலாண்மைக்கான மூன்று சிறப்பான வளர்ப்பு கிடாரி கன்றுகளின் உரிமையாளரான விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...