வால்பாறை அருகே தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் - கழுத்தில் சேலை சிக்கி உயிரிழந்த சோகம்

தங்கை கிருத்திகா உடன் விளையாடிய போது எதிர்பாராத விதமாக கழுத்தில் சேலை சுத்தியுள்ளது. விளையாட்டால் விபரீதம் ஏற்பட்டு சிறுவன் பலியானது இப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே 12 வயது சிறுவன் தொட்டில் கட்டிவிளையாடும் போது கழுத்தில் சேலை சிக்கி உயிரிழந்தார்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதியில் சசி குமார், சூர்யா அவர்கள் மகன் ராஜா 12 வயது கருமலை எஸ்டேட் நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடித்து வீட்டிற்குச் சென்ற சிறுவன் வீட்டின் வாசலில் உள்ள சட்டத்தில் சேலையால் தொட்டில் கட்டி தனது தங்கை கிருத்திகா உடன் விளையாடிய போது எதிர்பாராத விதமாக கழுத்தில் சேலை சுத்தியுள்ளது.



மேற்படி சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர் மேற்படி சிறுவன் இறந்துள்ளார் என்று தெரிவித்த நிலையில் சிறுவனின் பிரேதம் வால்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டால் விபரீதம் ஏற்பட்டு சிறுவன் பலியானது இப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...