தமிழக எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் - கோவை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

கோவை மாவட்டத்திற்குள் நுழையாதபடியும், வேறு மாவோயிஸ்டுகள் எல்லைப் பகுதிக்கு நுழைந்து விடாதபடியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள தமிழகம் - கேரளா - கர்நாடகா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள தமிழகம் - கேரளா - கர்நாடகா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எஸ்.பி., பத்ரி நாராயணன் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக எல்லை பகுதியான வாளையார், பொள்ளாச்சி, ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு கூடலூர் வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் குண்டு பட்டு தப்பித்துச் சென்றனர். அவர்கள் கோவை மாவட்டத்திற்குள் நுழையாதபடியும், வேறு மாவோயிஸ்டுகள் எல்லைப் பகுதிக்கு நுழைந்து விடாதபடியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், எஸ்.பி.சி.ஐ.டி., மாநகர் மற்றும் மாவட்ட பிரிவுகள், நுண்ணறிவுபிரிவு, ஸ்பெஷல் பிராஞ்ச், க்யூ பிராஞ்ச், மற்றும் எல்லை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு, 14 செக்போஸ்ட்களில் 160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், ஒவ்வொரு செக்போஸ்டில் செல்லக்கூடிய வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்து அனுப்பப்படும். அதேபோன்று நீலகிரி மாவட்டத்திலும் கேரளா மாநிலத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு வரக்கூடிய பயணிகளை முழுமையாக சோதனை செய்து அனுப்பப்படுவார்கள் என்றும், சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக அவர்களை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, ஆட்சியர் அக்கூட்டத்தில் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...