தமிழக எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் - கோவை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

கோவை மாவட்டத்திற்குள் நுழையாதபடியும், வேறு மாவோயிஸ்டுகள் எல்லைப் பகுதிக்கு நுழைந்து விடாதபடியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள தமிழகம் - கேரளா - கர்நாடகா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள தமிழகம் - கேரளா - கர்நாடகா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எஸ்.பி., பத்ரி நாராயணன் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக எல்லை பகுதியான வாளையார், பொள்ளாச்சி, ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு கூடலூர் வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் குண்டு பட்டு தப்பித்துச் சென்றனர். அவர்கள் கோவை மாவட்டத்திற்குள் நுழையாதபடியும், வேறு மாவோயிஸ்டுகள் எல்லைப் பகுதிக்கு நுழைந்து விடாதபடியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், எஸ்.பி.சி.ஐ.டி., மாநகர் மற்றும் மாவட்ட பிரிவுகள், நுண்ணறிவுபிரிவு, ஸ்பெஷல் பிராஞ்ச், க்யூ பிராஞ்ச், மற்றும் எல்லை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு, 14 செக்போஸ்ட்களில் 160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், ஒவ்வொரு செக்போஸ்டில் செல்லக்கூடிய வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்து அனுப்பப்படும். அதேபோன்று நீலகிரி மாவட்டத்திலும் கேரளா மாநிலத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு வரக்கூடிய பயணிகளை முழுமையாக சோதனை செய்து அனுப்பப்படுவார்கள் என்றும், சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக அவர்களை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, ஆட்சியர் அக்கூட்டத்தில் கூறியுள்ளார்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...