தமிழக எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் - கோவை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

கோவை மாவட்டத்திற்குள் நுழையாதபடியும், வேறு மாவோயிஸ்டுகள் எல்லைப் பகுதிக்கு நுழைந்து விடாதபடியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள தமிழகம் - கேரளா - கர்நாடகா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள தமிழகம் - கேரளா - கர்நாடகா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எஸ்.பி., பத்ரி நாராயணன் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக எல்லை பகுதியான வாளையார், பொள்ளாச்சி, ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு கூடலூர் வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் குண்டு பட்டு தப்பித்துச் சென்றனர். அவர்கள் கோவை மாவட்டத்திற்குள் நுழையாதபடியும், வேறு மாவோயிஸ்டுகள் எல்லைப் பகுதிக்கு நுழைந்து விடாதபடியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், எஸ்.பி.சி.ஐ.டி., மாநகர் மற்றும் மாவட்ட பிரிவுகள், நுண்ணறிவுபிரிவு, ஸ்பெஷல் பிராஞ்ச், க்யூ பிராஞ்ச், மற்றும் எல்லை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு, 14 செக்போஸ்ட்களில் 160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், ஒவ்வொரு செக்போஸ்டில் செல்லக்கூடிய வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்து அனுப்பப்படும். அதேபோன்று நீலகிரி மாவட்டத்திலும் கேரளா மாநிலத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு வரக்கூடிய பயணிகளை முழுமையாக சோதனை செய்து அனுப்பப்படுவார்கள் என்றும், சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக அவர்களை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, ஆட்சியர் அக்கூட்டத்தில் கூறியுள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...