தாராபுரம் ஐயப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் தாராபுரம் சோழக்கடை வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது.


திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் தராரபுரம் ஐயப்பன் திருக்கோயில் மகா கும்பாபிசேகத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சோளக்கடை வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி ஆலய ஜீர்னோத்தாரன அஷ்பந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

தாராபுரம் சோழக்கடை வீதியில், ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கும் பணி, மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.



தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர். தொடர்ந்து, முதல்கால யாக பூஜை நடந்தது. 14-ம் தேதி காலை, இரண்டாம் காலயாக பூஜையும், அன்று மாலை, மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. 15-ல் நான்காம் கால யாக பூஜையும், மாலை, ஐந்தாம் கால யாக பூஜையும், கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.



காலை, ஆறாம் கால யாக பூஜையும், 8:30 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகமும், 9:30 மணிக்கு ஐயப்பன், மூலஸ்தானத்தில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் தாராபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோபுர தரிசனம் மற்றும் சுவாமி தரிசனம் செய்தனர்.

குறிப்பாக ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் தாராபுரம் சோழக்கடை வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது. என்பது தாராபுரம் ஐயப்பன் கோயிலின் சிறப்பு என பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு ஸ்ரீ ஐயப்பன் கோவில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் ஜெமினி பெருவழி பயணக்குழு, தலைவருமான சி.சண்முகவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...