100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் கேட்டு கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் நிறுத்தி வைத்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய பாஜக அரசு முடக்க நினைப்பதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.


கோவை: கோவை தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் வழங்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பாக துடியலூர் அருகில் உள்ள தொப்பம்பட்டி பிரிவில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் நிறுத்தி வைத்து திட்டத்தை மத்திய பாஜக அரசு முடக்க நினைப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாரத்திற்கு அகில இந்திய பொது செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் கணபதி சிவக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் பி வி மணி, பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையை வைத்தனர்.

வட்டாரத் தலைவர் பி.டி மோகன்ராஜ் வரவேற்று பேசினார். இதில் பங்கேற்றவர்கள் மத்தியஅரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கவுன்சிலர் சிவக்குமார் வசந்த் தமிழ்ச்செல்வன். ராமநாகராஜ், சுரேந்திரபாபு செல்வராஜ் சிங்காரம் ராஜேந்திரன், சூர்யா வெள்ளிங்கிரி உட்பட பல கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...