100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் கேட்டு கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் நிறுத்தி வைத்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய பாஜக அரசு முடக்க நினைப்பதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.


கோவை: கோவை தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் வழங்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பாக துடியலூர் அருகில் உள்ள தொப்பம்பட்டி பிரிவில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் நிறுத்தி வைத்து திட்டத்தை மத்திய பாஜக அரசு முடக்க நினைப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாரத்திற்கு அகில இந்திய பொது செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் கணபதி சிவக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் பி வி மணி, பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையை வைத்தனர்.

வட்டாரத் தலைவர் பி.டி மோகன்ராஜ் வரவேற்று பேசினார். இதில் பங்கேற்றவர்கள் மத்தியஅரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கவுன்சிலர் சிவக்குமார் வசந்த் தமிழ்ச்செல்வன். ராமநாகராஜ், சுரேந்திரபாபு செல்வராஜ் சிங்காரம் ராஜேந்திரன், சூர்யா வெள்ளிங்கிரி உட்பட பல கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...