கோவை அருகே நள்ளிரவில் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் - தக்காளி, வாழை விளைபொருட்கள் சேதம்

காட்டு யானைகள் விரட்டப்பட்டாலும், மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீத்திபாளையம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களின் தோட்டத்திற்குள் நள்ளிரவில் புகுந்த காட்டுயானைகள் விளைபொருட்களை சேதப்படுத்தி சென்றன.

கோவை மேற்கு தொடர்சி மலை பகுதிகளில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. அந்த யானைகள் சில நேரங்களில் வனத்துக்கு ஒட்டிய கிராம பகுதிகளுக்கு வந்து உணவு ஆதாரங்களை உட்கொண்டு வனத்துக்குள் மீண்டும் சென்றுவிடும். இந்த நிலையிலே தீத்திபாளையம் பகுயிதில் நள்ளிரவு 10க்கும் மேற்பட்ட யானைகள் வனத்திலிருந்து வெளியே வந்திருக்கின்றன.



தீத்திபாளையம் பகுதியில் உள்ள தக்காளி மற்றும் வாழை தோட்டங்களுக்கு சென்று யானைகள் உணவு ஆதாரங்களை உட்கொண்டன. யானைகள் கூட்டமாக வந்ததனால் தக்காளி மற்றும் வாழைத்தோட்டங்கள் சேதப்படுத்தப்பட்டன.



தக்காளி அடுக்கி வைக்கப்பட்டிருந்த டிப்பர்கள் தூக்கி எறியப்பட்டு தக்காளிகள் வன யானைக் கூட்டத்தால் கீழே கொட்டி வீசப்பட்டன. தோட்டம் மட்டுமின்றி அருகாமையில் உள்ள ரேஷன் கடைக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையில் உள்ள உணவுப் பொருட்களையும் உட்கொண்டு ரேஷன் கடையும் சேதப்படுத்தி இருக்கின்றன. வழக்கமாக தோட்டத்திற்குள் மட்டும் வரும் யானைகள் தற்போது ஊருக்குள்ளும் புகுந்திருப்பதனால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்திருக்கின்றனர்.

பத்திற்கும் மேற்பட்ட யானைகள் தக்காளி வாழை தோட்டத்திலிருந்து வனத்திற்குள் விரட்டப்பட்டிருக்கின்றன. எனவே மாவட்ட வனத்துறை யானைகள் புகாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.



நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் அதிகாலை விரட்டப்பட்டிருக்கும் நிலையில் அது மீண்டும் போகாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தீத்திபாளையம் விவசாயிகள் மற்றும் கிராம வாசிகளின் அறிவுறுத்தலாக இருக்கின்றன.

ஒரு லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கும் விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியிருக்கிறனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...