இந்திய கலாச்சாரத்தை விரும்பும் பிரெஞ்ச் மாணவிகள் - கோவையில் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாட்டம்

கோவையில் தீபாவளி கொண்டாடிய “ரீயூனியன்” பிரெஞ்ச் பள்ளி மாணவ, மாணவிகள் இந்திய கலச்சாரம், பாடமுறைகள் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தங்களது தீவில் 30 சதவீதம் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் இருப்பதால் உணவு முறைகளில் பெரிய மாற்ற இல்லை என்றனர்.


கோவை: இந்திய கலாச்சாரம் குறித்து கற்று கொள்ள கோவை வந்த பிரெஞ்சு தீவு மாணவர்கள் உற்சாகமாக தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.



கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பாளையம் பகுதியில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் பரிமாற்றம் திட்டத்தின் கீழ் “ரீயூனியன்” (Reunion) தீவில் இருந்து வந்த 8 மாணவ, மாணவிகள் மற்றும் 2 ஆசிரியர்கள், இந்திய கலச்சாரம், மற்றும் பாடமுறைகள் குறித்து கடந்த 10 நாட்களாக கற்று வருகின்றனர்.



இறுதி நாளில் கோவை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து ரீயூனியன்( Reunion) தீவு பள்ளி மாணவ, மாணவிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் உண்டும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.



இவர்களது அழைப்பை ஏற்று கோவையில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் விரைவில் ரீயூனியன் (Reunion) தீவிற்கு செல்ல உள்ளனர்.

இது குறிந்து ரீயூனியன் பள்ளி மாணவிகள் கூறும் போது : தங்கள் தீவில் முழுமையாக பிரெஞ்சு முறை பாடதிட்டமே பின்பற்றபடுவதாகவும், இந்தியாவில் உள்ள பள்ளிகளில் பாட நேரத்தை விட தங்கள் தீவில் கூடுதல் நேரம் பள்ளி செயல்படுவதால் வீட்டு பாடங்கள் செய்வதில் பெரும் சவாலான சூழல் உள்ளது.

இந்திய பாடமுறை, அனைவருக்கு சமமாக சீருடை போன்ற விஷயங்கள் தங்களை கவர்ந்துள்ளது. தங்களது தீவில் 30 சதவீதம் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் இருப்பதால் உணவு முறைகளில் பெரிய மாற்ற இல்லை, ஆனால் காரம் சற்று கூடுதலாக உள்ளது என தெரிவித்தனர். மேலும் இந்த வாய்ப்பு மூலம் பல்வேறு புதிய விஷயங்களை தாங்கள் கற்றாக்கொண்டதாகவும் தெரிவித்தனர். அதே போல இந்திய மாணவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...