திருப்பூரில் விடிய விடிய பெய்த மழை - சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் அவதி

கனமழை காரணமாக பூலுபவட்டி பகுதியில் உள்ள குட்டை நிரம்பி, அதில் இருந்து தண்ணீர் சாலைகளில் சென்றது. இதனால், சாலைகள் வெள்ளம் போல் காட்சியளிப்பதால், அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் விடுமுறை அளித்துள்ளார்.



இந்த நிலையில் இரவு பெய்த கனமழையின் காரணமாக ரோடுகளின் அனைத்து பகுதிகளும் வெள்ளம் போல காட்சியளிக்கிறது.



திருப்பூர் மாநகர பகுதிக்கு உட்பட்ட தோட்டத்து பாளையம் பகுதியில் மழை நீரின் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை நீரினால் சூழப்பட்டுள்ளது.



அதேபோல பூலுபவட்டி பகுதியில் உள்ள குட்டை நிரம்பியதால் அதிலிருந்து வரும் மழைநீர் அனைத்தும் சாலைகளின் வருகிறது.



இதனால் அப்பகுதி வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. இதகாரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி தங்கள் வாகனத்தை இயக்குகின்றனர்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வளம் பாலம் முழுவதுமே மழை நீரால் மறைந்துள்ளது. மழை நீர் வெள்ளம் போல செல்வதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளில் சாலையில் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி செல்கிறார்கள்.

Newsletter

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...