கோவையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நிறைவு - ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என மீனா ஜெயக்குமார் பதில்

மீனா ஜெயக்குமாரின் சொத்து ஆவணங்கள் குறித்து கேட்ட கேள்விக்கு அதைப்பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது என்று தெரிவித்துவிட்டார்.


கோவை: கோவையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் 6-வது நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் திமுக பிரமுகர் மீனா ஜெயகுமார் வீடு, அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம், சௌரிபாளையம் காசாகிரான்ட் அலுவலகம், அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில் குமார் இல்லத்தில், திமுக முன்னாள் கவுன்சார் எஸ்.எம் சாமி வீட்டில் ஆகிய இடங்களில் 6 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வந்த நிலையில் மாலை சுமார் 6.30 அளவில் சோதனை நிறைவடைந்தது.

கடந்த நாட்களாக நடைபெற்ற சோதனையில் எந்த விதமான ஆவணங்களும் வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை.திமுக மீனா ஜெயக்குமார் அமைச்சர் ஏ.வ வேலுக்கு உறவினர் என்று கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக பிரமுகர் மீனா ஜெயகுமார், இந்த சோதனையில் அதிகாரிகள் எந்த பொருளும்,பணமும் ஆவணங்களும் எடுத்து செல்லவில்லை எனது கணவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமைச்சர் ஏ.வ வேலுவிற்கு அறிமுகமானவர் என்றும் அமைச்சர் ஏ.வ வேலு கோவை வந்தபோது பொங்கலூர் பழனிச்சாமி தன்னையும் தனது கணவரையும் அறிமுகப்படுத்தியதாக கூறினார்.

அமைச்சர் ஏவா வேலு எங்களுக்கு நெருங்கியவர் என்ற முறையில் வருமான வரி கலந்த இல்லத்தில் சோதனை நடத்தியதாகவும் தனது ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளுடன் காண்பித்து சரிபார்த்ததால் எந்த விதமான ஆவணங்களையும் வருமானவரித்துறையினர் எடுத்துச் செல்லவில்லை என்று கூறினார். வருமானவரித்துறை அதிகாரிகள் தனது செல்போனை கைப்பற்றி கொண்டு இன்று மாலை தான் கொடுத்தார்கள்.

சோதனையின் போது பணிவுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வி கேட்டார்கள் என்றும் கூறினார். பல்வேறு அமைச்சர்கள் வீட்டில இது போன்ற வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்கின்ற கேள்விக்கு வெளிப்படையாக இது அனைவருக்கும் தெரிகிறது. மீனா ஜெயக்குமாரின் சொத்து ஆவணங்கள் குறித்து கேட்ட கேள்விக்கு அதைப்பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...