கோவையில் இரவு முழுவதும் பெய்த கனமழை - சாலைகளில் ஆர்பரித்து ஓடும் வெள்ளம்

கோவை புறநகர் பகுதிகளில் வீரபாண்டி பகுதியில் உள்ள தரைப்பாலத்திற்கு மேலும், மாநகர் பகுதியில் அவிநாசி மேம்பாலம் மற்றும் லங்கா கார்னர் ரயில் பாலத்திற்கு அடியிலும் அதிக அளவிலான மழை நீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முழுவதும் கனமழை பெய்தது.



இரவு துவங்கிய மழை தற்பொழுது வரை பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.



இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக புறநகர் பகுதிகளில் வீரபாண்டி பகுதியில் உள்ள தரைப்பாலம், மாநகர் பகுதியில் உள்ள அவிநாசி மேம்பாலத்திற்கு அடியிலும் லங்கா கார்னர் ரயில் பாலத்திற்கு அடியிலும் அதிக அளவிலான மழை நீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் விடுமுறை அறிவித்துள்ளார்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...