உடுமலை தமிழிசை சங்கத்தின் துணைத் தலைவர் நினைவேந்தல் நிகழ்ச்சி

அமரர் வஞ்சிமுத்து கொண்ட நட்பு, அன்னாரின் தமிழ்ப்பணி, சமுதாயப் பணிகள் குறித்து எடுத்துரைத்து புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.


திருப்புர் :உடுமலை தமிழிசைச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அமரர் வஞ்சிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி உடுமலையில் நடைபெற்றது.



உடுமலை தமிழிசைச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அமரகா வஞ்சிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி உடுமலை மிழிசைச்சங்கத்தின் சார்பில் பாரதியார் நூற்றாண்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி தலைமை வகித்தார்.



சங்கத்தின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு. சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.

ஆர். கே. ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் அரிமா ஆர்.கே. ராமசாமி, அமரர் வஞ்சிமுத்து கொண்ட நட்பு, அன்னாரின் தமிழ்ப்பணி, சமுதாயப் பணிகள் குறித்து எடுத்துரைத்து புகழஞ்சலி செலுத்தினார்.



நல்லாசிரியர் கு.சீ. மணி, பேராசிரியர் முனைவர் செல்வநாயகம், வானொலி தங்கவேல், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா ஆகியோர் அன்னாரின் சிறப்புகளை கூறிப் புகழ் அஞ்சலி செலுத்தினர். அமரர் வஞ்சிமுத்து ஆசிரியரிடம் பயின்ற மாணவிகள் பானுப்பிரியா, மோகனப்பிரியா மற்றும் ராம் கோடி ராகவி ஆகியோர் தங்கள் ஆசிரியருக்கு இரங்கல் கவிதை படித்தனர்.

முன்னதாக ஆசிரியர் சின்னராசு வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக கல்வியாளர் செ. மூர்த்தி நன்றி கூறினார். சங்க ஒருங்கிணைப்பாளர் அமிர்தநேயன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அமரர் வஞ்சிமுத்துவின் புதல்வர் சரவணன் ஏற்புரை நிகழ்த்தினார். உடுமலை தமிழிசை சங்கத்தின் நிர்வாகிகள் எஸ். எம். டிராவல்ஸ் நாகராஜ் மற்றும் சத்யம் பாபு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அமரர் வஞ்சிமுத்து திருவருவப்படத்திற்கு அனைவரும் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...