கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தொழில்நுட்பம் சார்ந்த தகவல் பரிமாற்றம், புதுமையைக் கண்டுபிடித்தல் நறுமணப் பயிர்களின் தரம் சம்பந்தப்பட்ட காரணிகளை உடனடியாகப் பகுப்பாய்வு செய்தல் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வேளாண் பல்கலைகழகம் கையெழுத்திட்டது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் நிறுவனமான கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் இடையே புரிந்துணர்வு ஓப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் நிறுவனமான கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்கோவையில் கையெழுத்தானது. கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழிலில் பல புதுமைகளைக் கையாளும் ஒரு நிறுவனமாகும்.

வேளாண்மை சார்ந்த கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் இணைந்து செயல்படுவது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். தொழில்நுட்பம் சார்ந்த தகவல் பரிமாற்றம், புதுமையைக் கண்டுபிடித்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல், செயல்திறனைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களான நறுமணப் பயிர்களின் தரம் சம்பந்தப்பட்ட காரணிகளை உடனடியாகப் பகுப்பாய்வு செய்தல் போன்றவை இந்த ஒப்பந்தத்தின் இதர முக்கிய நோக்கங்களாகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி இந்த ஒப்பந்தம் உருவாக பெரிதும் துணைநின்றார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இரா. தமிழ்வேந்தன் மற்றும் கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குனர்பத்மினி சம்பத் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பெ. ஐரின் வேதமணி இந்த ஒப்பந்தம் உருவாக அடித்தளமிட்டு செயல்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில், ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளைப் பற்றி இவர்கள் விளக்கினார்கள்.

பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ந.சக்திவேல், நறுமணப் பயிர்கள் மற்றும் மலைத்தோட்டப் பயிர்கள் துறையின் பேராசிரியர் முனைவர் க.வி. ராஜலிங்கம் மற்றும் கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் திரு. சாரங்கன் வளவன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...