கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தொழில்நுட்பம் சார்ந்த தகவல் பரிமாற்றம், புதுமையைக் கண்டுபிடித்தல் நறுமணப் பயிர்களின் தரம் சம்பந்தப்பட்ட காரணிகளை உடனடியாகப் பகுப்பாய்வு செய்தல் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வேளாண் பல்கலைகழகம் கையெழுத்திட்டது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் நிறுவனமான கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் இடையே புரிந்துணர்வு ஓப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் நிறுவனமான கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்கோவையில் கையெழுத்தானது. கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழிலில் பல புதுமைகளைக் கையாளும் ஒரு நிறுவனமாகும்.

வேளாண்மை சார்ந்த கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் இணைந்து செயல்படுவது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். தொழில்நுட்பம் சார்ந்த தகவல் பரிமாற்றம், புதுமையைக் கண்டுபிடித்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல், செயல்திறனைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களான நறுமணப் பயிர்களின் தரம் சம்பந்தப்பட்ட காரணிகளை உடனடியாகப் பகுப்பாய்வு செய்தல் போன்றவை இந்த ஒப்பந்தத்தின் இதர முக்கிய நோக்கங்களாகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி இந்த ஒப்பந்தம் உருவாக பெரிதும் துணைநின்றார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இரா. தமிழ்வேந்தன் மற்றும் கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குனர்பத்மினி சம்பத் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பெ. ஐரின் வேதமணி இந்த ஒப்பந்தம் உருவாக அடித்தளமிட்டு செயல்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில், ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளைப் பற்றி இவர்கள் விளக்கினார்கள்.

பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ந.சக்திவேல், நறுமணப் பயிர்கள் மற்றும் மலைத்தோட்டப் பயிர்கள் துறையின் பேராசிரியர் முனைவர் க.வி. ராஜலிங்கம் மற்றும் கிரீன் காலர் அக்ரி டெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் திரு. சாரங்கன் வளவன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...