கவுண்டம்பாளையத்தில் முதியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை வழங்கிய ஆட்சியர்

கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வரும் அம்ரித் சிறப்பு மையத்தையும் அவர் பார்வையிட்டார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி கவுண்டம்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதன்படி கவுண்டம்பாளையம் நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், அங்குள்ள பொருட்களை பார்வையிட்டு கிடங்கு வளாகத்தையும் ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் மூவர் நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்களையும், பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வரும் அம்ரித் சிறப்பு மையத்தில் பார்வையிட்டு அங்குள்ள வசதிகளை கேட்டறிந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.



பின்னர் கவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் முதியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை வழங்கினார்.



இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதல்நிலை மண்டல மேலாளர் சதீஷ்குமார், மாவட்ட வளங்கள் அலுவலர் குணசேகரன், வடக்கு வட்டாட்சியர் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...