கள்ளக்கிணறு கொலை சம்பவத்தை தொடர்ந்து புதிய சோதனை சாவடி அமைப்பு

தொழில் வளர்ச்சி மிகுந்த பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருகின்றனர். குற்றப் பின்னணியில் உள்ளவர்களா என்பதை விசாரித்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், வீடு வாடகைக்கு எடுப்பவர்கள் குறித்த முழு தகவல்களையும் பெற்ற பின்பு அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பல்லடம் தாராபுரம் சாலையில் புதிய சோதனை சாவடி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.



இந்நிலையில் அங்கு புதிய சோதனை சாவடி கட்டப்பட்டு வந்த நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் அவர்கள் ரிப்பன் வெட்டி புதிய சோதனை சாவடியை திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் ADSP ஜான்சன், பொறுப்பு டிஎஸ்பி முத்துரத்தினம், காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ரவி, பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லட்சுமி, பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோகன், மற்றும் ஊர் மக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.



தொழில் வளர்ச்சி மிகுந்த பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருகின்றனர். குற்றப் பின்னணியில் உள்ளவர்களா என்பதை விசாரித்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், வீடு வாடகைக்கு எடுப்பவர்கள் குறித்த முழு தகவல்களையும் பெற்ற பின்பு அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...