புதுப்பொலிவுடன் நேரு மைதானம் - கோவையில் காணொலி மூலம் போட்டியை தொடங்கி வைத்த முதலமைச்சர்

கோவையில் புது பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள நேரு ஸ்டேடியத்தில் 38வது நேஷனல் ஜூனியர் அத்லடிக் சாம்பியன் போட்டி துவங்கியது.


கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.6.55 கோடி மதிப்பில் சிந்தடிக் ஓடுதளம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

கோவை வஉசி அருகே நேரு விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கில் உள்ள கால்பந்து மைதானத்தை சுற்றி ஓட்டப்பந்தயம் நடத்த 400மீ தூரத்திற்கு சிந்தடிக் ஓடுதளம் உள்ளது. இந்த ஓடுதளம் கடந்த 2008-ல் அமைக்கப்பட்டது.

இந்த ஓடுதளம் தற்போது பழுதடைந்து உள்ளது. இந்நிலையில், ஓடுதளம் சீரமைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புதிதாக சிந்தடிக் ஓடுதளம் கோவை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.6.55 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது.

தவிர விளையாட்டு அரங்கில் சிறப்பு மராமத்து பணி ரூ.65 லட்சம் மதிப்பில் நடைபெற்றது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இதையடுத்து, சிந்தடிக் பாதை அமைக்கும் பணி, நேரு விளையாட்டு மைதானம் மராமத்து பணிகள் நடந்து வந்தது. இதில், தற்போது சிந்தடிக் ஓடுதளம் பாதை அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து இன்று 38வது நேஷனல் ஜூனியர் அத்லடிக் சாம்பியன் போட்டி துவங்கியது போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அத்லெடிக் அசோசியேஷன் தலைவர் தேவாரம் துணைத் தலைவர் மோகன் தாஸ், செயலாளர் சி.லதா ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் பத்தாம் தேதி வரை நேரு ஸ்டேடியத்தில் 38வது நேஷனல் ஜூனியர் அத்லடிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...