தீபாவளிப் பண்டிகையையொட்டி கோவையில் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசு

கோவை மாநகராட்சி 15 வது வார்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளவதற்காக மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


கோவை: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி கோவை மாநகராட்சி 15வது வார்டில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தண்ணீர் விநியோகிப்பாளர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு வேஷ்டி, சேலை, இனிப்புகள் மற்றும் ஊக்கப்பரிசுகளை மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து வழங்கினார். முன்னதாக பாதாளச் சாக்கடைப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகராட்சி 15 வது வார்டு சுப்பிரமணியம் பாளையத்தில் சுமார் 100க்கும் மேற்பட தூய்மை பணியாளர்கள், தண்ணீர் விநியோகிப்பவர்கள் உள்ளனர்.



அவர்களும் தீபாவளியை கொண்டாடும் விதமாக 15வது மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் தண்ணீர் விநியோகிப்பாளர்களுக்கும் இனிப்புடன் வேஷ்டி சேலை மற்றும் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பச்சை முத்து முன்னிலை வகித்தார். இதில் RGPRS வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துல் காதர், சர்க்கிள் தலைவர் சின்னு ராமகிருஷ்ணன், மாதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 300 கோடி மதிப்பில் துடியலூர், கவுண்டம்பாளையம், வீரகேரளம், வடவள்ளி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன் ஒரு பகுதியாக 15 வது வார்டில் பாதாள சாக்கடை திட்டப்பணி மேற்கொள்ள மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து அவர்கள் தலைமையில் பூஜை போடப்பட்டது.

இவ்விழாவில் கன்ஸ்ட்ரக்சன் மேனேஜர் மதன், எல்.என்.டி இன்ஜினியர் ராஜராஜன், ஷேக் அப்துல் காதர், நஞ்சுகுட்டி கவுண்டர், செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...