உடுமலையில் வாக்காளர் சிறப்பு முகாம் - வட்டாச்சியர் நேரில் ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை வட்டாட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி ஆண்டு தோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு வழக்கமான திருத்தப் பணிகள் தொடங்கியது. அன்றைய தினம் முதல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும் நேரில் படிவங்கள் அளித்தும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் 2024 ஜன.1-ம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் வாக்காளர்கள் பெயர் சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆன்லைன் மற்றும் நேரிலும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் 2 நாட்கள் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.



அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அத்துடன் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்காமல் இருந்தால் அதிகாரிகள் இனைத்துக் கொடுத்தனர்.



உடுமலை தாலுக்கா பகுதியில் நடைபெற்ற இந்த பணியை உடுமலை தாசில்தார் ப.சுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...