விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் - மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் எல் முருகன் அறிவுரை

உடலுக்கு உறுதியும், மனதிற்கு அமைதியையும் தருவது விளையாட்டு என்பதால் மாணவர்கள் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வெற்றிபெற வேண்டும் என மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை இரத்தினம் கல்விக் குழுமத்தில் "இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமி " திறப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர்.மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார்.

இரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா செந்தில் முன்னிலை வகித்தார்.



சிறப்பு விருந்தினர் எல்.முருகன், இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமியினை தன் பொற்கரங்களால் திறந்து வைத்தார்.



பூப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம் என பல விளையாட்டு மைதானங்கள் இங்கு அமைந்துள்ளன. இந்த விளையாட்டு மைதானங்களின் மொத்த மதிப்பு சுமார் மூணு கோடி ரூபாய் ஆகும்.

பின்னர் அவர் பேசுகையில்," உடலுக்கு உறுதியும், மனதிற்கு அமைதியையும் தருவது விளையாட்டு ஆகும். மாணவர்கள் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வெற்றிபெற வேண்டும். நமது நாட்டின் விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்களும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்து உள்ளனர். அதேபோல் இரத்தினம் கல்விக் குழுமங்களின் மாணவ, மாணவியரும் வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும் என்று கூறினார்.

இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர்.மதன்.ஆ.செந்தில் பேசுகையில்,"நமது இரத்தினம் கல்விக் குழுமங்களின் மாணவ,மாணவியர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பல்கலைக்கழக அளவிலும், தேசிய அளவிலும் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கவும், மேலும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியருக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதே இந்த இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நோக்கமாகும்" என்று கூறினார்.

இந்த விழாவில் இரத்தினம் கல்விக் குழுமங்களின் செயலாளர் முனைவர்.மாணிக்கம் இரத்தினம் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் முனைவர்.பா.நாகராஜ் மற்றும் இரத்தினம் கல்விக் குழுமங்களைச் சேர்ந்த அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள் பேராசிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...