மூலனூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி - ஒடிசா மாநில தொழிலாளர்கள் 4 பேர் கைது

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்களும், நிதி நிறுவன அதிபர் செல்வராஜ் தூங்கிய பிறகு அவரது ஒரு வீட்டிற்கு தாழ்பாள் இட்டு மற்றொரு வீட்டில் வைத்திருந்த நகை, பணத்தை கொள்ளை அடிக்க சென்றதாகவும், ஆனால் அங்கு எதிர்பார்த்தபடி பணம், நகை எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும் போலீசாரிடம் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் விநாயகா நகர் பகுதியில் வசித்துவரும் நிதி நிறுவன அதிபர் செல்வராஜ், இவர் தனக்கு சொந்தமாக இரண்டு வீடுகளை வைத்துள்ளார்.

அதில் ஒரு வீட்டின் பகுதி முழுவதும் புட்கள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. இதற்காக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா(23,)உத்தாமேதர் (31)சோனியா நாயக்(20) குனாபெஹாரா(26) ஆகிய நான்கு பேரை அழைத்து வந்து நேற்று பகலில் வீட்டை சுத்தம் செய்யும் பணியினை கொடுத்துள்ளார். பணி முடிந்ததும் அவர்களை அங்கிருந்து மாலை அனுப்பி வைத்துவிட்டார். இந்த நிலையில் செல்வராஜ் தனது மற்றொரு வீட்டிற்கு சென்று அங்கு இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மறுநாள் காலை இன்று எழுந்ததும் கதவை திறந்தபோது கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் தனது நண்பருக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்து தனது வீட்டிற்கு வரவழைத்து பார்த்த போது செல்வராஜ் தூங்கிக் கொண்டிருந்த வீட்டின் கதவு முன் பக்கத்தில் பூட்டு போடப்பட்டிருந்தது. அதன் பிறகு நண்பர் தாழ்பாலை திறந்து விட்டு வெளியே வந்து சுற்று முற்றும் பார்த்தனர். ஆனால் சந்தேகப்படும்படியான எந்த ஒரு சம்பவமும் தெரியவில்லை.

அதன் பிறகு அருகில் இருந்த மற்றொரு தனது வீட்டைச் சென்று பார்த்தபோது அந்த வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் மீண்டும் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் அவர் வைத்திருந்த ஆவணங்கள் கலைந்த நிலையில் கிடந்தது இதனால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது உங்கள் வீட்டிற்கு நேற்று வந்தார்களா என செல்வராஜ் இடம் விசாரித்தார். அப்போது ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த நான்கு கூலி தொழிலாளர்கள் நேற்று வீட்டை சுத்தம் செய்ய வந்ததாக தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.



விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரும் செல்வராஜ் தூங்கிய பிறகு அவரது ஒரு வீட்டிற்கு தாழ்பாள் இட்டு மற்றொரு வீட்டில் வைத்திருந்த நகை பணம் கொள்ளை அடிக்க சென்றதாகவும், ஆனால் அங்கு அவர்கள் எதிர்பார்த்தபடி பணம் நகை எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும் ஒப்புக்கொண்டனர்.

அதன் பிறகு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர்கள் மீது மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரிசா மாநில தொழிலாளர்கள் பகலில் கூலி தொழிலாளர்கள் ஆகவும் இரவில் கொள்ளைக்காரர் ஆகவும் இருந்து வந்தது மூலனூர் பகுதி மக்களிடத்தில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...