மூலனூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி - ஒடிசா மாநில தொழிலாளர்கள் 4 பேர் கைது

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்களும், நிதி நிறுவன அதிபர் செல்வராஜ் தூங்கிய பிறகு அவரது ஒரு வீட்டிற்கு தாழ்பாள் இட்டு மற்றொரு வீட்டில் வைத்திருந்த நகை, பணத்தை கொள்ளை அடிக்க சென்றதாகவும், ஆனால் அங்கு எதிர்பார்த்தபடி பணம், நகை எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும் போலீசாரிடம் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் விநாயகா நகர் பகுதியில் வசித்துவரும் நிதி நிறுவன அதிபர் செல்வராஜ், இவர் தனக்கு சொந்தமாக இரண்டு வீடுகளை வைத்துள்ளார்.

அதில் ஒரு வீட்டின் பகுதி முழுவதும் புட்கள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. இதற்காக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா(23,)உத்தாமேதர் (31)சோனியா நாயக்(20) குனாபெஹாரா(26) ஆகிய நான்கு பேரை அழைத்து வந்து நேற்று பகலில் வீட்டை சுத்தம் செய்யும் பணியினை கொடுத்துள்ளார். பணி முடிந்ததும் அவர்களை அங்கிருந்து மாலை அனுப்பி வைத்துவிட்டார். இந்த நிலையில் செல்வராஜ் தனது மற்றொரு வீட்டிற்கு சென்று அங்கு இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மறுநாள் காலை இன்று எழுந்ததும் கதவை திறந்தபோது கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் தனது நண்பருக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்து தனது வீட்டிற்கு வரவழைத்து பார்த்த போது செல்வராஜ் தூங்கிக் கொண்டிருந்த வீட்டின் கதவு முன் பக்கத்தில் பூட்டு போடப்பட்டிருந்தது. அதன் பிறகு நண்பர் தாழ்பாலை திறந்து விட்டு வெளியே வந்து சுற்று முற்றும் பார்த்தனர். ஆனால் சந்தேகப்படும்படியான எந்த ஒரு சம்பவமும் தெரியவில்லை.

அதன் பிறகு அருகில் இருந்த மற்றொரு தனது வீட்டைச் சென்று பார்த்தபோது அந்த வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் மீண்டும் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் அவர் வைத்திருந்த ஆவணங்கள் கலைந்த நிலையில் கிடந்தது இதனால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது உங்கள் வீட்டிற்கு நேற்று வந்தார்களா என செல்வராஜ் இடம் விசாரித்தார். அப்போது ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த நான்கு கூலி தொழிலாளர்கள் நேற்று வீட்டை சுத்தம் செய்ய வந்ததாக தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.



விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரும் செல்வராஜ் தூங்கிய பிறகு அவரது ஒரு வீட்டிற்கு தாழ்பாள் இட்டு மற்றொரு வீட்டில் வைத்திருந்த நகை பணம் கொள்ளை அடிக்க சென்றதாகவும், ஆனால் அங்கு அவர்கள் எதிர்பார்த்தபடி பணம் நகை எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும் ஒப்புக்கொண்டனர்.

அதன் பிறகு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர்கள் மீது மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரிசா மாநில தொழிலாளர்கள் பகலில் கூலி தொழிலாளர்கள் ஆகவும் இரவில் கொள்ளைக்காரர் ஆகவும் இருந்து வந்தது மூலனூர் பகுதி மக்களிடத்தில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...