தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் - எம்.எல்.ஏக்களிடம் மனு வழங்க முடிவு

அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 7-ம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டமாக வரும் 6-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.


கோவை: மின் கட்டண உயர்வு குறைக்க வலியுறுத்தி 234 சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து மனு அளிக்க கோவை தொழில் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்

கோவையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ் மற்றும் ஜெயபால் கூறுகையில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க இது வரை 6 கட்டங்களாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நிலைகட்டணம் மற்றும் பீக்ஹவர் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.

அதுமட்டுமில்லாமல் 3B-யில் இருந்து 3A-க்கு மாற்றிய அரசாணையை அமல்படுத்தாமல் காலதாமதம் ஏற்படுத்து வருவதாக தமிழக அரசின் மீது குற்றம் சாட்டினர்.

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.எங்களின் தொழில் 40 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எங்களின் வலியை அரசு புரிந்து கொண்டு செவி சாய்க்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 7-ம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டமாக வரும் 6-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். அரசின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையாக இதை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

கோவையை பொறுத்தவரை 10 சட்டமன்ற உறுப்பினர்,2 நாடாளுமன்ற உறுப்பினர்களை கோ இண்டியா வளாகத்திற்கு வரவழைத்து அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்க இருக்கின்றோம்.

இதில் நடவடிக்கை இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அன்றே முடிவு செய்யப்படும் எனவும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...