உடுமலை வட்டாரப் போக்குவரத்துறை சார்பில் பேருந்து நிலையத்தில் ஆய்வு

உடுமலையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் வைத்திருந்த பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டார போக்குவரத்து துறை சார்பில் பேருந்து நிலையங்களில் உள்ள பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி உடுமலை பகுதியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பஸ்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிக சத்தம் தரக்கூடிய ஏர்ஹாரன் மற்றும் அலங்கார விளக்குகள் குறித்த சிறப்பு சோதனை 30 பஸ்களில் செய்யப்பட்டது.

இதில் 10 பஸ்களில் ஏர்ஹாரன் குறைபாடு கண்டறியப்பட்டு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. மேலும் ரூபாய் 27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையானது தொடர்ந்து செய்யப்படும் என்று உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...