உடுமலை வட்டாரப் போக்குவரத்துறை சார்பில் பேருந்து நிலையத்தில் ஆய்வு

உடுமலையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் வைத்திருந்த பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டார போக்குவரத்து துறை சார்பில் பேருந்து நிலையங்களில் உள்ள பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி உடுமலை பகுதியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பஸ்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிக சத்தம் தரக்கூடிய ஏர்ஹாரன் மற்றும் அலங்கார விளக்குகள் குறித்த சிறப்பு சோதனை 30 பஸ்களில் செய்யப்பட்டது.

இதில் 10 பஸ்களில் ஏர்ஹாரன் குறைபாடு கண்டறியப்பட்டு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. மேலும் ரூபாய் 27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையானது தொடர்ந்து செய்யப்படும் என்று உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...