மணக்கடவு பகுதியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - காவல்துறை விசாரணை

அலங்கியம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மணக்கடவு பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகன் சரவணன், தனது காதலி தற்கொலை செய்து கொண்டதை தாங்கமுடியாமல், அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மணக்கடவு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சரவணன் (வயது20). இவர் முத்தூர் அருகே உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த தாராபுரம் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி சரவணனின் காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்தநிலையில் காதலனான சரவணன் காதலி தற்கொலை செய்த நாள்முதல் காதலியை நினைத்து மனம் உடைந்த நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்தார். இது குறித்து பெற்றோர் பலமுறை சரவணனிடம் கேட்டும் ஒன்றும் இல்லை என சரவணன் பதில் கூறி வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தந்தையிடம் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். சரவணன் காலையில் வெகு நேரமாகியும் எழுந்திருக்காமல் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த தந்தை பெரியசாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சரவணன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சரவணனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சரவணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து அலங்கியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...