முறைகேடாக கிராவல் அள்ளிய வாகனங்கள் - சிறைபிடித்த காவல்துறை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முறைகேடாக கிராவல் அள்ளிய கனரக வாகனங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் லாரிகள் காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டன.


 திருப்பூர்: உடுமலை அருகே முறைகேடாக கிராவல் அள்ளிய வாகனங்களை சிறைபிடித்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முறைகேடாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஜல்லிபட்டி ஊராட்சி உட்பட்ட துணை பாறை அருகில் சீத்தாமடை குட்டை உள்ளது. முறையாக அனுமதி பெறாமல் இந்த குட்டையில் இருந்து கடந்த சில நாட்களாக டிப்பர் லாரிகள் மூலமாக கிராவல் மண்ணை அள்ளிச் சென்றனர். இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படும் சூழல் உருவானது. மேலும் வனப்பகுதியின் எல்லைக்குள் அமைந்துள்ள இந்த குட்டையில் மண் அள்ளப்படுவதால் அரிய வகை உயிரினங்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.



இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மண்ணை அள்ளுவதற்காக வந்த டிப்பர் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. மேலும் இது குறித்த தகவல் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் மற்றும் அமராவதி போலீசார் லாரிகளை அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் இனிமேற்கொண்டு கிராவல் மண்ணை எடுக்கக்கூடாது என்றும், தவறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து கிராவல் மண்ணை எடுக்க வந்த லாரிகள் திரும்பிச் சென்றன. விவசாயிகளும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...