புதர் மண்டிக்கிடக்கும் கொழுமம் ரோடு ரயில்வே சுரங்கப் பாதை - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

உடுமலை அருகே உள்ள கொழுமம் ரோடு ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிநிற்கும் கழிவு நீர் மற்றும் மண்டிக்கிடக்கும் புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: ரயில்வே கேட்டு அருகில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை தற்போது புதர் மண்டி சூழ்ந்து காணப்படுவதால், அவசர தேவைகளுக்கு கூட ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமம் ரோடு ரயில்வே கேட் பகுதியில் கொழுமம் குமரலிங்கம் ருத்ரபாளையம் பழனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில் ரயில்வே கேட்டு அருகில் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது.



ரயில் வரும் நேரங்களில் தாமதமானால் சுரங்கப்பாதை வழியாக வாகன ஓட்டிகள் செல்வதற்கு அமைக்கப்பட்ட நிலையில், தற்போது புதர் மண்டி சூழ்ந்து காணப்படுகின்றது.



இதனால் அவசர தேவைகளுக்கு ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை தற்போது உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...