கோவை யு.டி.எஸ் நிதி நிறுவனம் மோசடி - ஏமார்ந்த 200க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளிப்பு

யுனிவர்சல் டிரேடிங் சொலிசன் என்ற நிதி நிறுவனத்தில் பணம் தெலுத்தி ஏமாந்தவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் மனு அளிக்க குவிந்தனர்.


கோவை: நாங்கள் உழைத்து சம்பாரித்து சிறுக, சிறுக சேமித்த பணத்தை இழந்து தவித்து வருகிறோம் என்று கோவை யு.டி.எஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

யுனிவர்சல் டிரேடிங் சொலிசன் என்ற நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் அதிக லாபம் மற்றும் வட்டி தருவதாக போலியான வாக்குறுதிகளை அளித்து தமிழ்நாடு முழுவதும் சுமார் 75 ஆயிரம் பேரிடம் சுமார் 1300 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் தகுந்த ஆதாரத்துடன் புகாரளிக்க காவல்துறை தரப்பில் அறிவுறுத்தியிருந்தனர்.



இதனால் கோவையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் 200 க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க குவிந்தனர்.



இது குறித்து பணம் இழந்தவர்கள் கூறுகையில், காவல்துறையுனரின் வழிகாட்டுதலில் ஏற்கனவே புகாரளித்த நிலையில் மீண்டும் புகாரளிக்க வந்ததாகவும் இந்த நிதி நிறுவன மோசடி தொடர்பாக ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தனர், ஆனால் எந்த நிவாரணமும் வழங்கவில்லை எனவும் அந்த குழுவையும் கலைத்து விட்டார்கள் எனவும் தெரிவித்தனர். நாங்கள் உழைத்து சம்பாரித்து சிறுக,சிறுக சேமித்த பணத்தை இழந்து தவித்து வருகிறோம். நிதி நிறுவனத்தின் பேரில் பல்வேறு இடங்க்களில் ஏக்கர் கணக்கில் இடம் வாங்கி போட்டுள்ளார்கள். அவற்றை பறிமுதல் செய்தாலே பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை செலுத்த முடியும் என தெரிவித்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...