பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும் - மேட்டுப்பாளையத்தில் சமூக நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பஞ்சமி நிலத்தினை மீட்க கோரியும், பஞ்சமி நில விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க கோரியும், சமூக நீதி கட்சி சார்பில், மேட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சமூக நீதி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சமூக நீதி கட்சி மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். பஞ்சமி நிலங்களை மீட்டிட தனி ஆணையம் அமைக்க வேண்டும். காரமடை குட்டையூரில் உள்ள, 60 ஏக்கர் பஞ்சமி நில விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பஞ்சமி நில வாரிசுதாரர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை, வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...