சாலைமறியல் போராட்டத்தில் அதிமுக திமுகவினர் மோதல்

உடுமலை அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் அதிமுக திமுகவினர் மோதலால் கைகலப்பு ஏற்பட்டு மண்டை உடைக்கப்பட்டது.


திருப்பூர்: குடிநீர் கேட்டு நடந்த சாலைமறியல் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சங்கராம நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.



இந்த நிலையில் நேற்று இரவு அதிமுக மற்றும் பொதுமக்கள் உடுமலை சாலையில் அரசு பேருந்துகளை சிறை பிடித்து காலி குடங்களுடன் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்பொழுது திமுகவை சேர்ந்த சங்கராம பேரூராட்சி தலைவர் மல்லிகாவின் கணவர் கருப்புசாமி பேச்சுவார்த்தைக்கு வந்த பொழுது அதிமுக திமுக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது இதில் திமுகவில் பேரூர் கழக இளைரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன் என்பவருக்கு மண்டை உடைந்தது.

அதிமுகவில் எம்ஜிஆர் இளைரணி செயலாளர் சந்தோஷ் கௌதம் மற்றும் மகேஸ்வரன் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். திமுகவைச் பிரகதீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் அதிமுகவினர். சந்தோஷ் கௌதம் கருப்புசாமி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உடுமலை அருகே குடிநீர் கேட்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் அதிமுக திமுகவினர் மோதிக்கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...