திருப்பாவை பாடல்களை பாடினால் மழை வரும் என சடகோப ராமானுஜ ஜீயர் உடுமலை திருப்பதி கோவிலில் பேட்டி

முழு நிலவான ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று உடுமலை திருப்தி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மேல்கோட்டை சடகோப ராமானுஜ ஜீயர் கலந்துகொண்டார்.


திருப்பூர்: உடுமலை திருப்பதி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் மேல்கோட்டை சடகோப ராமானுஜ ஜீயர் பக்தர்களுக்கு அர்ச்சதை தூவி ஆசிர்வாதம் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.



முழு நிலவான ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.



இதில் கலந்து கொள்வதற்காக மேல்கோட்டை சடகோப ராமானுஜ ஜீயர் வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருப்பதி வேங்கடேச பெருமாள், பத்மாவதிதாயார், ஆண்டாள் உள்ளிட்ட கோவில் வளாகத்தில் எழுந்தருளி அருள்பாளிக்கும் கடவுள்களுக்கு சிறப்பு பூஜையை ஜீயர் நடத்தி வைத்தார்.



இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் ஜீயர் பக்தர்களுக்கு அர்ச்சதை தூவி ஆசிர்வாதம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, முழு மனதோடு கடவுளிடம் சரணடைந்தால் நிச்சயம் அருள் பாலிப்பார். இதற்காக நமக்குள் இருக்கும் குறைகளை முதலில் நீக்க வேண்டும். பின்னர் கடவுளிடம் பிரார்த்தனை வைக்க நினைத்ததை நிறைவேறும். மேலும் கோவிலில் நம்மால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும். தற்போது போதிய அளவில் மழைப் பொழிவு இல்லை. இதனால் மழை வேண்டி ஆண்டாளை நினைத்து மனமுருகி திருப்பாவை பாடல்களை 30 நாட்கள் தொடர்ந்து பாட வேண்டும். 31-வது நாள் பெருமாள் ஆசியுடன் நிச்சயம் மழைப் பொழிவு ஏற்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...