மடத்துக்குளத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பளம் தொகைய உடனே வழங்க கோரி மடத்துக்குளத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: வேலை கேட்டு விண்ணப்பித்து அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பளம் தொகைய உடனே வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் மூன்று மாதத்திற்கு மேல் கிராமப்புற 100 நாள் திட்ட தொழிலாளர்களின் சம்பளம் உடனே வழங்க வேண்டும், சட்டக் கூலி 294 வழங்க வேண்டும், வேலை கேட்டு விண்ணப்பித்து அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ச்சியாக 100 நாள் வேலை வழங்க வேண்டும், வேலை செய்யும் இடத்தில் அனைத்து தொழிலாளர்களையும் சமமாக பாகுபாடு இன்றி நடத்த கோரியும் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கார்த்திகேயன் மற்றும் பழனிச்சாமி, சௌந்தரராஜன், சுப்பிரமணியம், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...