துர்க்கையம்மன் கோவிலில் அன்னதானம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் துர்க்கையம்மன் கோவிலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சாமி தரிசனம் செய்தார்.


திருப்பூர் தாராபுரம் :துர்க்கையம்மன் கோவிலில் அன்னதான நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்வழி பங்கேற்றார்

தாராபுரம் துர்க்கையம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இந்த கோவிலில் அமர்ந்து நெல் மணியில் முதல் எழுத்து எழுதிய பின்பு பள்ளியில் சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் கோவில் பக்தர்கள் சார்பில் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பூஜைக்கு சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பிறகு குழந்தைகளுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் இருக்கும் ஒவ்வொரு தெய்வங்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார். கோவிலுக்கு குடும்பம் குடும்பமாக வந்த பக்தர்களிடம் உரையாடினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...