நீதிமன்ற உத்தரவின் படி சொத்துக்களை மீட்ட தமிழ்நாடு வக்பு வாரியம்

திருப்பூரில் 3 பள்ளிவாசல் உட்பட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழ்நாடு வக்பு வாரியம் கையகப்படுத்தியது.


 திருப்பூர்: நீதிமன்ற உத்தரவுப்படி 3 பள்ளிவாசல் மறும் 140 கடைகள் கையகப்படுத்தப்பட்டது.

திருப்பூர் காதர் பேட்டையில் உள்ள அஹ்லே சுன்னத் ஜமாத் பள்ளிவாசலுக்கு உட்பட்ட மேலும் இரண்டு பள்ளிவாசல் மற்றும் 140 கடைகள் உள்ளிட்டவற்றை கடந்த முப்பது ஆண்டுகளாக நிர்வகித்து வந்த சலீம் (எ) அப்துல் ரகுமான் என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக காதர்பேட்டை பூர்வீக ஜமாத்தார், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் 2013ம் ஆண்டு புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து வக்பு வாரியம் சலீமை நிர்வாக பொறுப்பில் இருந்து அகற்றியது. இதனை எதிர்த்து சலீம் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த 2015ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்தால் 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி அன்று உச்சநீதிமன்றம் நிர்வாக பொறுப்பில் உள்ள சலீமை அகற்றி வக்பு வாரியம் பள்ளிவாசல் மற்றும் அதற்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்தி நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை உறுதி செய்தது.



அதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் வக்பு வாரிய அதிகாரிகள் இன்று சலீமிடமிருந்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 பள்ளிவாசல் மற்றும் 140 கடைகள் உட்பட அசையா சொத்துக்களை கையகப்படுத்தினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...