பாலம் பணியை விரைந்து முடிக்க நகராட்சிக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள, பாலம் கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் மந்தமாக நடைபெறும் பணிகளை முடுக்கிவிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சி ஆர்.ஆர், தியேட்டர் ரோடு, குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு, செக்கு வீதியில் சாக்கடை கால்வாய் தோண்டப்பட்டு, பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் இருந்தது.

அவ்வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல், வேறு வழியாக சுற்றிச் செல்லும் நிலை காணப்பட்டது.மேலும், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கடும் துர்நாற்றம் வீசியதால், கால்வாய் அருகே கடை வைத்து இருப்போர் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த, 10 நாட்களுக்கு முன், செக்கு வீதியில் பாலம் கட்டுவதற்காக ரோடு தோண்டப்பட்டது. இவ்வழியாக வாகனங்கள் செல்லாமல் இருக்க, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் மந்தமாக நடப்பதால், இவ்வழியாக செல்ல வேண்டிய வாகன ஓட்டுநர்கள், பல்லடம் ரோடு வழியாக சுற்றிச் செல்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்தி முடித்து, போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...