கோவை மாநாடு பற்றி தாராபுரத்தில் ஓபிஎஸ் அணி அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆலோசனை

தாராபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஓபிஎஸ் அணி கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


திருப்பூர்: ஜனவரி 6ஆம் தேதி ஓபிஎஸ் பன்னீர்செல்வம் தலைமையில் கோவையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைத்து உறுப்பினர்களையும் கலந்து கொள்வது குறித்து செயல் வீரர்கள் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் கழக செயல் வீரர்கள் கூட்டம் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜர் தலைமையில், ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் அழகுராஜ், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.



இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் ஜனவரி 6ஆம் தேதி ஓபிஎஸ் பன்னீர்செல்வம் தலைமையில் கோவையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைத்து உறுப்பினர்களையும் கலந்து கொள்வது குறித்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடம் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் ஆலோசனை வழங்கினார்.



இந்த கூட்டத்திற்கு தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஓபிஎஸ் அணி செயல்வீரர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர் ஜவகர் செய்திருந்தார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...