துடியலூர் அருகே மான்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு - பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட தீயணைப்புத்துறையினர்

கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் மான் குட்டியை விழுங்கி விட்டு நகர முடியாமல் இருந்த மலைப் பாம்பை பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.


கோவை: மான் குட்டியை விழுங்கி விட்டு நகர முடியாமல் இருந்த மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் சி.ஆர்.பி.எப். எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் நேற்று இந்த பயிற்சி மையத்தின் வளாகத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று இரையை விழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்துள்ளது.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.



அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மலைப் பாம்பை லாவகமாக பிடித்தனர். அப்போது அந்த பாம்பு குட்டி மானை விழுங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...